tamilnadu

img

தமிழக அரசு நீதித்துறையில் வேலை - டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பு 

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு பொதுச்சேவையில் சேர்க்கப்பட்டுள்ள  நீதித்துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர் , கிரேடு II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிர்வாகம் : தமிழ்நாடு பொதுச்சேவை - நீதித்துறை 

பணி          : உதவி அரசு வழக்குரைஞர் 

மொத்த காலியிடங்கள்    : 50

தகுதி         : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் , சட்டத்துறையில் பி.எல் பட்டம் பெற்று , பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்.

                        மேலும், தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்    : மாதம் ரூ. 56,100 - ரூ. 1,75,500 வழங்கப்படும் 

வயது         : 34 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை  :  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை        : www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்          : பதிவு கட்டணமாக ரூ.150 , முதல்நிலை தேர்வுக்கு ரூ.100 , முதன்மை தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். 

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி             : 06.11.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 24.09.2021 

                                  மேலும் விபரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையமுகவரியில் சென்று  தெரிந்துகொள்ளவும்.

;