தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 24-ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஜூன் 20-ஆம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை வருகின்ற ஜுன் 24ஆம் தேதி அன்று கூடும் என கடந்த 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. இதனால், 24-ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஜுன் 20-ஆம் தேதி, காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.