tamilnadu

இணைய வழிச் சேவை மூலம் பட்டா-சிட்டா பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, ஜூலை 6- தமிழ்நாட்டில் எங்கிருந்தும் எந்த  நேரத்திலும் இணைவழிச் சேவை மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை  பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்  டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. இதுகுறித்து நில அளவை மற்றும்  நிலவரித் திட்டத்தின் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளில், பல வகையான நில ஆவணங்கள் கணினி மயப்படுத்தப்பட்டு இணையவழி யில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணைய வழிச் சேவைகள் நில அளவை மற்  றும் நிலவரித்திட்டம் துறையால் பொது  மக்களுக்கு அளிக்கப்பட்டு வரு கின்றன. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும்  நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா  மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்  கலாம். நில உரிமைதாரர்கள் புல எல்லை களை அளந்து அத்து காட்டக் கோரு வதற்கு https://tamilnilam.tn. gov.in/citizen/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்கள் பட்டா /  சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப் படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நில அளவைப் பதிவேட்டின் நகல்,  நகர நில அளவை வரைபடம் மற்றும்  புல எல்லை வரைபடம் / அறிக்கை  ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா  மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்   தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

கிராம வரைபடங்கள் மற்றும்  பழைய நில அளவை எண்களுக்  கான புதிய நில அளவை எண்களின்  ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்ற வற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயி லாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவை களை தங்கள் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.