tamilnadu

வாகனம் திருடிய 3 பேர் கைது

போரூர், மார்ச் 2- நெற்குன்றம் புவனேஸ் வரி நகரில் திங்களன்று (மார்ச் 2) அதிகாலை கோயம்பேடு  காவல்துறை உதவி ஆய்வாளர் பூபதி ராஜ் தலைமையில் காவ லர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை தடுத்து  நிறுத்தினர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை காவலர்கள் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆழ்வார் திருநகர் ஜீவா சாலையைச் சேர்ந்த சூர்யா, நெற்குன்றம் ஜெயராம் நகரைச் சேர்ந்த திலீப்குமார் (18) என்பது தெரிந்தது. மேலும் அவர்கன் வந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இவர்கள் 3 பேரும் கோயம் பேடு, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து  வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 6  இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டது. கைதான சூர்யா மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.