காலமானார்
திருவள்ளூர், நவ.11- மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.விநாயகமூர்த்தியின் தாயாரும், மறைந்த மூத்த தோழர் பி.கே.கோவிந்தசாமியின் மனைவியு மான ஜி.சந்திரம்மாள் திங்களன்று காலமானார். அவருக்கு வயது 86. ஜி.சந்திரம்மாள் உடலுக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.எஸ். கண்ணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், கே.விஜயன். பி.துளசிநாராயணன், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றியச் செயலாளர் என்.ரமேஷ்குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.கதிர்வேல், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான பட்டமந்திரியில் அன்னாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேன் மோதி தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை, நவ.11- பூண்டி அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (32). ஒதப்பை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரீத்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஞாயிறன்று (நவ.10) சங்கர் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கூனிபாளையம் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே பென்னாலூர்பேட்டையில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து பென்னாலூர்பேட்டை காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
மணல் திருட்டு: லாரிகள் பறிமுதல்
ஆவடி,நவ.11- ஆவடியை அடுத்த கரலப்பாக்கம் பகுதியில் ஞாயிறன்று இரவு முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்த போது மாகரல் பகுதியில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்காக சென்று கொண்டி ருப்பது தெரிய வந்தது.இதையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையா ளர்கள் ஆவடி மேட்டுத்தும்பூர் பகுதியை சேர்ந்த ரவி (41) முத்து (41) மாகரல் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (48) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.