tamilnadu

அரசுப் பேருந்துகளில் திருக்குறள்-திருவள்ளுவர் படம்: கி.வீரமணி கோரிக்கை...

சென்னை:
தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் திருவள்ளூர் படத் துடன் திருக்குறளும் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

முந்தைய அதிமுக ஆட்சியில் பேருந்துகளில் திருவள்ளுவரின் அங்கீகரிக்கப் பட்ட படத்தையும், குறள் பாக்கள் எழுதியதையும் மாற்றி ஏதேதோ படங்கள் முதலியவை வைத்துள்ள நிலை ஏற்பட்டிருந்தது.எனவே,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி அனைத்து பேருந்துகளிலும் அண்ணா ஆட்சியில் - கலைஞர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது எப்படி அமைத்தார் களோ அப்படியே அரசுப் பேருந்துகளிலும் அமைத்திட சுற்றறிக்கை அனுப்பி, அதை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

;