tamilnadu

img

விடுதலை வேள்வியின் மையப்புள்ளி திலகர் திடல்...

நாடு இன்று 78வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது. சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில்  உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில்  திலகர் திடல் இருந்தது. பொதுக்கூட்டங்கள் வாயிலாக  சுதந்திர வேட்கையை தூண்டிவிடும் மையப்புள்ளியாக அவ்விடம் திகழ்ந்தது.   மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், சிங்காரவேலர்  உள்பட பலர் விடுதலை உணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கு உரையாற்றியுள்ளனர்.