tamilnadu

img

தீக்கதிர் சந்தா சேகரிக்கும் பணி (ஜூலை 1 - 10 ஆம் தேதி) தீவிரம்

1.ஜூலை 1 ஆம்தேதி முதல் 10 ஆம்தேதி வரையில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்க்கும் பணியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் களமிறங்கி உள்ளது. இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம், கூடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமையில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கூடலூர் தாலுகா செயலாளர் எம்.ஆர்.சுரேஷ், இடைக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், நௌபல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2.தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கத் தின் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம்  ஓமலூர் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர்களில் ஒருவரான கரு.வே.சுசீந்திர குமார் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கினார். உடன் சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

3.கோவை மாவட்டம், மேட்டுபாளையம் பகுதியில் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி  தலைமையில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில், தெருவோர வியாபாரிகள் துவங்கி அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் தீக்கதிர் நாளிதழின் சந்தாதாரர் ஆகினர்.