tamilnadu

img

தீக்கதிர் நிருபரை தாக்கிய காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்...

சென்னை:
செய்தி சேகரிக்கும் ஊடகத்தின ரை தாக்கிய  காவல்துறையினரின் கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக பிப்ரவரி 26அன்று  நடைபெற்று வரும் ஊழியர்களின் போராட்டம் குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற தீக்கதிர் நாளேட்டின் செய்தியாளர் கவாஸ்கரை காவல்துறையினர் செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்ததோடு, தாக்கியும், அவரது புகைப்பட கேமிராவையும் பறித்தும்சென்றுள்ளனர். காவல்துறை யினரின் இத்தகைய நடவடிக்கை மிக கண்டனத்திற்குரியதாகும்.

 ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக பாவிக்கப்படுகிற செய்தி மற்றும் ஊடகத்தினரிடம் அண்மைக்காலமாக இத்தகைய மோசமான தன்மையில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இம்மாதத்தில் மட்டும் நான்கு முறை பல்வேறு இடங்களில்  ஊடகத்தினர் இத்தகைய முறையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது கேமிரா உள்ளிட்ட உடமைகள் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  மாநிலத் தலைநகரான சென்னையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அங்கெல்லாம் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களிடம் இத்தகைய மோசமான முறையில்கண்மூடித்தனமாக  காவல்துறை யினர் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, தமிழக அரசும், காவல்துறை தலைவர் அவர்களும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, இத்தகைய மோசமான நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் தடுக்க வேண்டும் என்பதோடு, பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் கண்மூடித்தனமான முறையில் நடந்து கொள்ளும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

;