tamilnadu

img

திரையரங்குகள் இன்று திறப்பு.... டிக்கெட் கட்டணம் உயர்வா?

சென்னை:
50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்கு கள் திங்களன்று திறக்கப் படும் நிலையில், திரை யரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து திரை யரங்குகள் மூடப்பட்டன. 250நாட்களுக்கு பிறகு கடந்தஆண்டு நவம்பர் மாதத்தில்திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட னர். கொரோனா 2-ம் அலைபரவலால் கடந்த ஏப்ரல் 24-ம்தேதி முதல் திரையரங்கு கள் மீண்டும் மூடப்பட்டன. அதற்கு பிறகு பல்வேறுதளர்வுகள் அறிவிக்கப்பட்ட
போதும் திரையரங்கு களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை.

இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு திங்கட்கிழமை திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 50 சதவீதப் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், திரையரங்கப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதை உரிமையாளர் கள் உறுதி செய்ய வேண்டும்என வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் திரை யரங்குகள் திறக்கப்படுவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது:“தமிழகத்தில் 1,100திரையரங்குகள் உள்ளன.கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு ஆகிய மாவட்டங் களை உள்ளடக்கிய கோவைமண்டலத்தில் 168 திரையரங்குகள் உள்ளன. தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் திரையரங்குகளைத் திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள் ளது. அரசின் வழிகாட்டு தலின்படி 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளைச் செயல்படுத்த உள்ளோம்.

திரையரங்கப் பணியாளர்களுக்கு ஏற்கெனவேநாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த நடவடி க்கை எடுத்துவிட்டோம். அரசின் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தனியார் மருத்துவமனைகளில் எங்களது செலவிலும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. தடுப்பூசி செலுத்திய பணியாளர்கள் அனைவரும் ‘நான் தடுப்பூசி செலுத்திவிட்டேன்’ என்பதை அறிவிக்கும் விதமாக ‘பேட்ச்’ ஒன்றை அணிந்துகொள்ளும் வகையில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவுள்ளோம். அப்போது திரையரங்குக்கு வரும் மக்களுக்கு நம்பிக்கைவரும்.

தற்போதைய சூழலில் தமிழில் ’அரண்மனை - 3’, ‘சிவக்குமார் சபதம்’, ‘லாபம்’ உள்ளிட்ட திரைப்படங்களும், இந்தி நடிகர் அக்சய்குமார் நடித்த ’பெல் பாட்டம்’, ’கான்ஜுரிங் - 3’உள்ளிட்ட சில திரைப்படங் களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. மேலும் அடுத்தடுத்து சில திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.சமூகத்தில் இயல்பு வாழ்க்கை என்பது தற்போதுதிரும்பிக் கொண்டிருக் கிறது. பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஓட்டல்கள், கடைகள், வணிகநிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இதனால்பொதுமக்களும் திரையரங்குகளுக்கு இயல்பாக வரத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.வாரத்தில் சனி, ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் 40 சதவீதம் முதல்50 சதவீதம் வரை மட்டுமேஇருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வழக்கம்போல் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கும்போது, திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும். 2 வாரங்களில் அத்தகைய நிலை ஏற்படும் என நம்புகிறோம். அதற்காக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கொரோனா தொற்று மேலும் குறையும்போது விரைவில்100 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படு வார்கள் என எதிர்பார்க் கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;