விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் வட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் பெஞ்சால் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மை செய்யும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டத் தலைவர் எஸ். பிரகாஷ், செயலாளர் சே.அறிவழகன், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சேறும் சகதியுமான அறைகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவக்கழிவுகள், குப்பைகள் ஆகியவற்றை அகற்றினர். திண்டிவனம் அரசு மேல்நிலை பள்ளியையும் சுத்தம் செய்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நான்கு நாட்கள் வாலிபர் சங்கத்தினர் இதுபோன்ற பணிகளில் ஈடுபடவுள்ளனர்.