tamilnadu

img

16 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி, புலிக்கொரடு கிராமம், ராஜீவ்காந்தி நகரில், சர்வே எண்.113ல் 4 தலை முறைகளாக 2.33 ஏக்கர்  நிலத்தில் 102 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த இவர்களுக்கு 2006ம் ஆண்டு முதல் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. “மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, 2006ம் ஆண்டு முதல் வருவாய்த்துறை, வனத்துறை,  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட  அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வந்தார். வன நிலத்திற்கு ஈடாக இருமடங்கு நிலத்தை வருவாய்த்துறை தந்தால் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கபடும் என்று தமிழ்நாடு காப்புக்காடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கூறினார். இதனையடுத்து சிபிஎம் தலைவர்கள் காஞ்சிபுரம் ஆட்சியருடன் பேசினர்.  இதன் எதிரொலியாக செங்கல்பட்டு, வேதநா ராயண புரம் கிராமம், தேவர்மலைப் பகுதியில் 4.66 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை 2015ஆம் ஆண்டு வனத்துறைக்கு வருவாய்த்துறை வகை மாற்றம் செய்து கொடுத்தது. அதன்பிறகு, தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர்,  புலிக்கொரடு கிராமத்தில் நில அளவை செய்து பட்டா வழங்க தயார் நிலை யில் உள்ளனர். ஆனால், வனத்துறை தனது நிலத்தை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர்  கா. ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் ஆகியோரை சந்தித்து சிபிஎம்  தலைவர்கள் மனு அளித்தனர். விரைவில்  பட்டா கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அங்குள்ள மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.