சென்னை, ஆக. 29 - சென்னை கண்ணப்பர் திடலில் குடிவைக்கப்பட்ட மக்களின் வாழ்விட உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றுள் ளது. அம்மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி ரிப்பன் மாளிகை அருகில் தெருவோரத்தில் வசித்து வந்த மக்க ளை, மூன்று மாதத்தில் குடியிருப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி அடிப்படையில் கண்ணப்பர் திடல் அருகில் உள்ள வீடற்றோர் காப்பக கட்டிடத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தங்க வைத்தனர். தற்போது அக்கட்டி டத்தில் அரசாங்கக் கணக்குபடி 115 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மனிதர்கள் வாழ்வதற்கு தகுதி யற்ற கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்ட மக்கள், அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி குடியிருப்பு ஒதுக்கக் கோரி மனுக்கள் மேல் மனுக்கள் கொடுத்து போராட்டங்கள் நடத்தினர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, அம்மக்க ளுக்கு மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 114 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மறியலில் ஈடுபட்ட கண்ணப்பர் திடல் மக்கள்
ஆனால், இந்த குடியிருப்பில் குடி யேற ஒவ்வொரு குடும்பமும் நான்கரை லட்சம் பணத்தை, பயனாளித் தொகை யாக கட்டச் சொல்லி பெருநகர சென்னை மாநகராட்சி கூறியது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி பயனாளிக் கட்டணம் செலுத்த இயலாது என்கிற கோரிக்கையை முன்வைத்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து தோழர்கள் பங்கேற்றனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா போராட்டத் தில் பங்கேற்றதற்காக காவல்துறை கைது செய்து வாகனத்தில் ஏற்றியது. மக்கள் போராட்டத்தின் காரணமாக அவரை வாகனத்தில் இருந்து இறக்கியது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ. சர்வேசன், எழும்பூர் பகுதிச் செயலாளர் கே. முருகன், பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.கே. மூர்த்தி, ஜி. ராஜாமணி, பெரியமேடு கிளைச் செயலாளர் என். மனோகரன், வழக்கறிஞர் மோகன் ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் சிபிஎம் முறையீடு!
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 23 அன்று பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையரை நேரடியாக சந்தித்து பயனாளித் தொகை செலுத்தாமல் வீடு கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணை யரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆகஸ்ட் 28 அன்று மாநகராட்சி மண்டலம் 5, அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை யும் மக்களையும் அழைத்துப் பேசினர். “நான்கரை லட்சம் வேண்டாம், ஒன்ற ரை லட்சம் கட்டினால் இரண்டு நாளில் வீடு கொடுப்போம்” என்றார்கள். பய னாளித் தொகை ஒரு ரூபாய் வாங்கா மல் வீடு கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தொலைபேசியில் வந்த மகிழ்ச்சியான செய்தி
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை, கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “பயனாளித் தொகையே இல்லாமல் வீடுகளை ஒதுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 22 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட திட்டமே இல்லை. எனவே, பயனாளித் தொகை இல்லாமல் வீடுகளை ஒதுக்கீடு செய்வ தற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.” அவரும் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், வியாழனன்று (ஆகஸ்ட் 29) காலை சுமார் 11 மணிக்கு அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவை தொலைபேசியில் அழைத்து, “கண்ணப்பர் திடலில் குடி யிருக்கும் மக்களுக்கான பய னாளிகள் கட்டணத்தை அரசாங்கமும் மாநகராட்சியும் ஏற்றுக்கொள்ளும். பயனாளித் தொகை பெறாமல் குடி யிருப்புகள் ஒதுக்கப்படும்” என்கிற மகிழ்ச்சியான செய்தியை தெரி வித்தார். அதைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், மாநகராட்சி தரப்பில் இருந்து பயனாளிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக மக்களிடம் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் - அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி
திமுக அரசுக்கும், தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு ஆகி யோருக்கும், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், இவர் களோடு இணைந்து இந்த பிரச்சனைக் காக ஆதரவு தெரிவித்த மக்கள் இயக்கங்களுக்கும், ஊடக நண்பர் களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு குடும்பத்தினரும் பல்வேறு துயரத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி, உயிரிழப்புகளை சந்தித்து சென்னை நகரத்தில் வீடு கேட்டு, விடாப்பிடியாக போராடிய கண்ணப்பர் திடலில் குடியிருக்கும் மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.. பாராட்டுக்கள். புரட்சிகர வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஜி. செல்வா குறிப்பிட்டுள்ளார்.