tamilnadu

img

சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் – சிபிஎஸ்இ  

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த இரு வாரங்களாகவே பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. இதன் காரணமாக இன்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து கொண்டே வருகிறது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 30ல் தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெற உள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1ல் தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.  தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ போர்டுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

;