tamilnadu

img

தொகுப்பு வீட்டின் கூரை இடிந்து விபத்து - பெண் பலி

திருவையாறு அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  
திருவையாறு அருகே மருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் தேவகி (45). மருமகன் சுப்பிரமணி. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். 
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.  மழையால், கல்யாணசுந்தரத்தின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், தேவகியின் கணவர் சுப்பிரமணி, தேவகியின் தந்தை கல்யாணசுந்தரம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருவூர் காவல் துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடிபாட்டில் சிக்கிய தேவகியின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


 

;