நிலத்திலிருந்து கிடைக்கும் நெல்லும் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோக வகைகளும் தொழிலாளரை பொறுத்ததே. ரயில்வேகளும் நீராவி கப்பல்களும் தொழிலாளர் முயற்சியாலேயே ஓடுகின்றன. உலகத்தில் உற்பத்தியாகும் எல்லா பொருட்களும் தொழிலாளர்களையே பொறுத்திருக்கின்றன. உலகத்தாருக்கு வேண்டிய சாமான்களை யெல்லாம் தொழிலாளர்களே செய்கிறார்கள். சுருங்கக்கூறுமிடத்து உலகமே தொழிலாளர்களால் நடைபெறுகிறது என்று கூறலாம்.