தொழிலாளர்களின் கோரிக்கைகளை புதுச்சேரி அரசு அலட்சியப்படுத்துகிறது
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, தொடர்ச்சியாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தும் போக்கு தொடர்கதையாகி உள்ளது என்று சிஐடியு குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, தொழிலாளர் துறைக்கு சந்திரபிரியங்கா என்ற ஒரு பெண் அமைச்சர் நியமிக்கப்பட்டார். உட்கட்சியின் பூசலால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அந்தத் துறைக்கு தனியாக ஒரு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. அரசின் தொழி லாளர் துறைக்கு தனியாக ஆணை யர் பதவிக்கு நீண்ட காலமாக யாரும் நியமிக்கப்படவில்லை. ஏனைய துறைகளில் பணியாற்றும் அதி காரிகளை பொறுப்பு அதிகாரிகளாக பார்க்கும் நிலை தான் தற்போது வரை உள்ளதாக சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பொறுப்பு அதிகாரிகள் தொழிலாளர்கள் நலனுக்காக நியமிக்கப்பட்ட அனைத்து தொழி லாளர் அதிகாரிகளும் பொறுப்பு அதி காரிகளாகவே உள்ள அவல நிலையில் தான் புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை உள்ளது. புதுச்சேரி தொழிலாளர்கள் பிரச்சனைகள் அரசின் அக்கறையற்ற போக்கு தொடர்கிறது. தொழிலாளர்கள் நல்லுறவு கூட்டம் என்ற பெயரில் நிறுவனங்கள் மற்றும் தொழி லாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றை புதுச்சேரி அரசின் தொழி லாளர் துறை பிப்ரவரி 28 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு தெரி விக்காமலே நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வரின் விசித்திர குற்றச்சாட்டு இக்கூட்டத்தில் உரை யாற்றிய முதல்வர் ரங்கசாமி, தொழி லாளர்களால் தான் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு போய் விட்டது என்ற தங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் பேசியதோடு தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரு. 8000 சம்பளம் போதாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் பேசிய பேச்சு தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் அவ மானப்படுத்துவது போன்று உள்ள தாக சிஐடியு கண்டனம் தெரி வித்துள்ளது. சிஐடியு கண்டனம் இது குறித்து சிஐடியு புதுச்சேரி மாநிலச் செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தி வரும் மோசமான பொரு ளாதார கொள்கைகளால் அத்தியா வசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. வீட்டு வாடகை, பெட்ரோல் விலை உயர்வு, மருத்துவம், கல்வி மற்றும் உணவுப் பொருட்கள் இருமடங்கு மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ள கருத்து அரசின் தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதே நேரத்தில், தொழிலாளர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கூட ரூ.15 ஆயிரம், 20 ஆயிரத்தை தாண்டி வில்லை. உண்மை நிலை இப்படி யிருக்க, புதுச்சேரியின் முதல்வர் ரூ. 8 ஆயிரம் இருந்தால் போதும் என்று என்ற தோணியில் பேசியிருப்பது ஆட்சியின் அவலத்தை மறைக்கும் செயலாகும் என்றார். பிரச்சார இயக்கம் செயல்படாத தொழிலாளர் நலத் துறைக்கு அதிகாரிகளை நியமிக்க கோரியும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ஆணையை நிறைவேற்றக்கோரி மக்களிடமும் விளக்கமாக எடுத்துக் கூறும் வகையில் புதுச்சேரி முழுவதும் சிஐடியு புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் மார்ச் 3,4,5,6 ஆகிய தேதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.