“பள்ளிப்படிப்பின்போது நூலகத்திற்கு செல்லும்முன் ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்தேன். நூலகத்திற்கு சென்றபின் உலகம் புரிந்தது. பள்ளியில் அகரம் மட்டுமே அறிமுகம், ஆனால் நூலகத்தில் தான் காவியங்கள் அறிமுகமாகிறது. படிக்கும் குழந்தைகள் செல்போன் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு, மற்ற நேரங்களில் பள்ளிப் பாடம், நூலகப் பாடம் என இரண்டையும் படித்தால் தான் புதுக் குடிமகனாக உருவாக முடியும்” என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.