சென்னை, ஆக. 16 - மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கட்டணமில்லா சிகிச்சை வழங்கு வதை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.16) சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைக்கான புதிய மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தை (என்எச்ஐஎஸ்) அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால், இந்த திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும், இந்த நிறு வனத்திடம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் ஆகிய நிறுவனங் களும் அரசாணையை மதிக்காமல் செயல்படுகின்றன. சிகிச்சைக் கட்டணத் தில் 20 முதல் 40 விழுக்காடு வரை மட்டுமே வழங்கி மோசடி செய்கின்றன எனவே, இது தொடர்பாக உரிய விசார ணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களின் ஊதியத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் படி மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த முறையைக் கைவிட்டு, ஊழியர்கள் விருப்பப்படி வருமான வரி பிடித்தம் செய்யும் பழைய முறையை செயல் படுத்த வேண்டும். இந்த இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் பொதுச் செயலா ளர் ச.மயில், “இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 4 ஆண்டுகளுக் கானது. ஆண்டுக்கு சுமார் 320 கோடி ரூபாய் வீதம் மருத்துவ காப்பீட்டுத் திட்ட த்திற்கு ஊழியர்களிடம் இருந்து 1440 கோடி ரூபாயை பிடித்தம் செய்கின்ற னர். அரசாணைப்படி சிகிச்சைக் கட்ட ணத்தை முழுமையாக தராமல் மிகப் பெரிய மோசடி செய்கின்றனர். எனவே, காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.
கூட்டணியின் தலைவர் மூ. மணி மேகலை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயி னார் தொடங்கி வைக்க, கூட்டணியின் பொருளாளர் தா. கணேசன் உள்ளிட்ட தோழமை சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பு மாநிலத் தலைவர் சா. டேனியல் ஜெயசிங் நிறைவுரையாற்றி னார்.