tamilnadu

4 தொகுதிகளிலும் அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம்

சென்னை, ஏப்.25-சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 18 ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

;