tamilnadu

img

தோழர் லெனின் சுந்தர் மறைவு: உழைக்கும் மக்களுக்கு பேரிழப்பு!

சென்னை, ஜூலை 27- சிஐடியு மாவட்டச் செயலாள ரும், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னருமான தோழர் லெனின் சுந்தரின் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்  பட்ட பேரிழப்பாகும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு வட சென்னை மாவட்டச் செயலாளரு மான தோழர் லெனின் சுந்தர் (வயது  56) அவர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் லெனின் சுந்தர் அவர்கள்  1988-ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஈடு படுத்திக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே வாலிபர் சங்கத்தில் இணைந்து அம்பத்தூர் பகுதியில் வாலிபர் சங்கத்தை கட்டுவதிலும், ஐ.சி.எப். காலனி குட்டை ஆக்கிர மிப்பிற்கு எதிராகவும், அதை யொட்டி மைதானத்தை பாதுகாப்ப தற்காகவும் அப்பகுதியில் பெரும் இயக்கத்தை உருவாக்கியவர். கோவை விஜயா கொலைக்கு எதி ராக அம்பத்தூரில் நடைபெற்ற பெரும் இயக்கத்தில் பங்கேற்றவர்.  தோழர் உ.ரா. வரதராசன் சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட போது முழுமையாக தேர்தல் பணிகளில் பங்கேற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பகுதிக்குழு உறுப்பினர், அம்பத்  தூர் பகுதி செயலாளர், மாவட்டக் குழு உறுப்பினர், சிஐடியு மாவட்டச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளிலிருந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்  களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர் வோடு திறம்பட பணியாற்றியவர். மார்க்சிய சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். அவ ருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் மக்க ளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்ச லியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அவரது மறைவால் துயருற் றுள்ள அன்னாரது மனைவி, மகள், மகன் மற்றும் குடும்பத்தினருக்கும், வடசென்னை மாவட்ட தோழர் களுக்கும் கட்சியின் மாநில செயற்  குழு தனது ஆறுதலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள் கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.