tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலை

சென்னை, ஜூலை 9-  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5 ஆம் தேதியன்று இரவில் பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார்.  

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இல்  லத்திற்கு ஜூலை 9 செவ்வாய்க்கிழமை யன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றார். அப்போது, இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி  பொற்கொடி மற்றும் குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முதலமைச்சருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் எம்எல்ஏ  ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, கொலை பாதகச் செய லில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனை பெற்றுத் தரு வோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்  தில் பதிவிட்டிருப்பதாவது: கொலை பாதகச் செயலில் ஈடுபட்ட வர்களை சட்டத்தின் முன் நிறுத்திக் கடும்  தண்டனை பெற்றுத் தருவோம் என்று  பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர் களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளி யோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமை யை ஆற்றும்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.