tamilnadu

img

மெரினாவில் கலைஞர் நினைவிடம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, பிப்.26-  சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞர் நினை விடம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத்தார்.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி  அமைந்தவுடன், சென்னை மெரினா வில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணா நிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார்.

அதன்படி அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.  அண்ணா வின் நினைவிடமும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

8.57 ஏக்கர் நிலப்பரப்பில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினை விடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் கருணாநிதி நினைவிடம், அருங்காட்சியகம் திறப்பு விழா திங்க ளன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

மைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து கலைஞர் சிலை யை திறந்து வைத்த முதல்வர், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.   பின்னர் புதிதாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ள கலைஞரின் கம்பீர நினைவகத்தையும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவகத்தையும் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேரவைத் தலை வர் மு. அப்பாவு, அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டா லின், பி.கே. சேகர்பாபு, மு.பெ.சாமி நாதன், மக்களவைத் திமுக தலைவர் டி.ஆர்.பாலு, அ.ராசா, கனிமொழி, மேயர் பிரியா, அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சட்ட மன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் கே.வீ. தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், தொல். திருமாவளவன் எம்பி, காதிர் மொய்தீன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், திரைக் கலைஞர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.