சென்னை, ஏப். 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள வைத் தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை (ஏப்.6) சென்னையில் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் உள்ள மதவெறி ஆட்சியை அப்புறப்படுத்தி மதச்சார் பற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மக்களவைத் தேர்தலை சந்திக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு விரிவான தேர்தல் அறிக்கையை தில்லியில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் என்கிற ஒரு தேர்தல் அறிக்கை யும், வருகிற காலங்களில் தமிழ்நாட்டில் எந்தெந்த பிரச்சனைகளை மையப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் போராடு வார்கள் என்பதை வலியுறுத்தியும் மற்றொரு வேண்டுகோள் அறிக்கையையும் வெளியிட்டி ருக்கிறோம். (இன்றைய இதழுடன் சிறப்பித ழாக வெளியாகியுள்ளது)
மதவெறி ஆட்சியை அகற்றுவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்த கூட்டணியின் வேட்பாளர்கள் நாடு முழுக்க தேர்தல் களத்தில் இறங்கி விட்டனர். இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என எங்கள் கட்சியின் தேர்தல் வேண்டுகோளாக, மத்தியக்குழு தேர்தல் அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பாஜக நடத்தி வரும் மதவெறி அரசியல், ஜனநாய கத்தை குழித் தோண்டி புதைத்திருக்கும் சட்டத் திருத்தங்கள் அனைத்தையும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் திரும்பப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும் என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறோம்.
ஒற்றைக் கலாச்சாரத்தை முறியடிப்போம்!
பல மதங்களைச் சார்ந்து வாழ்கிற பன்முகம் கொண்டிருக்கும் இந்திய நாட்டில், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்,ஒரே பண்பாடு, ஒரே மொழி என்கிற ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கும் அபாயத்தை முறியடிப்போம். இந்தியாவின் பன்முகத்தன்மை, இந்தியாவின் பல மதங்களை சார்ந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழும் மாண்புகளை பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் எழுப்பும்.
கருப்புச் சட்டங்களை தூக்கி எறிவோம்!
அடக்குமுறை சட்டங்கள், விசாரணைக்குழு அமைப்பு ‘உபா’ என்கிற கொடுமையான சட்டங்கள் அனைத்தையும் சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றுவதுடன் மட்டுமல்லாமல், இந்த சட்டங்களை பயன்படுத்தி நாடு முழுவதும் அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்து உள்ள அனைவரையும் கைது செய்வதற்கு குரல் எழுப்புவோம்.
மீட்டெடுப்போம்!
கடந்த பத்தாண்டு காலத்தில் அதானி, அம்பானி போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசாங்கம் எண்ணற்ற சலுகையை வாரி வழங்கியிருக்கிறது. பணக்கார நிறுவனங்களுக்கான வரியை குறைத் துள்ளது பாஜக அரசு. நமது நாட்டின் சொத்துக் களான பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளதை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.
33 சதவீத இடஒதுக்கீடு!
பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அடுத்து வரக்கூடிய தேர்தலில் அமல்படுத்துவதற்கான சட்டத்தை கொண்டு வருவோம், அடிதட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. அதில் குறிப்பாக, கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து விட்டது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் என்பதை 200 நாள் வேலையாக மாற்று வோம். தினசரி கூலி 600 ரூபாயாக உயர்த்து வோம்; நகர்ப்புறங்களில் இந்த வேலை திட்டத்தை விரிவுபடுத்துவோம்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தமிழ் மொழி வளர்ச்சிக்கு குரல் கொடுப்போம், இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம். அகில இந்திய போட்டித் தேர்வுகளில் அந்த அந்த மாநில மொழிகளில் எழுதலாம் என்பதை கொண்டு வருவோம். உச்சநீதி மன்ற கிளையை சென்னையில் அமைப்பதற்கும் விவசாயத்திற்கு கூடுதல் மூலதனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வற்புறுத்தி போராடி பெற்றுக்கொடுப்போம்.
அசுர பலத்தில் இந்தியா கூட்டணி!
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக தலைமையில் சிபிஎம் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். இந்த கூட்டணி வலுவாக உள்ளது. ஏற்கனவே, தேர்தல் பணிகள் துவங்கும் போது, தமிழ்நாடு -புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கூறப் பட்டது. அது மேலும் வலுப்பெற்றுள்ளதால் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
எங்களை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் படு தோல்வி அடைவார்கள். இது மட்டுமல்ல, பல தொகுதிகளில் டெபாசிட் தொகையை கூட திரும் பப் பெற முடியாது என்கிற நிலைமைதான் தற்போது உள்ளது.
மூழ்கிய பாஜக கப்பல்!
தற்போது, இந்தியா முழுமைக்கும் உள்ள நிலைமைகளை பார்க்கும்போது, மோடி தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வட மாநிலங்களில் படுதோல்வி அடையும் என்ற நிலைமைதான் உருவாகியிருக்கிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கூட பாஜக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுகின்றனர்.
வடக்கிலும் மாறியது காற்று!
மற்றொரு பக்கம், வேட்பாளர் பட்டியல் அறி விக்கப்பட்ட பிறகு, அதில் முக்கிய நபர்கள் சிலர் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என விலகிக் கொள்ளும் ஒரு மோசமான நிலைமை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படியான ஒரு நிலைமை இந்திய வரலாற்றில் எந்தக் கட்சிக்கும் ஏற்பட்டது கிடையாது. இதைப் பார்க்கும்போது, காலம் காலமாக எங்களுக்கு தலம் என்று சொல்லிக்கொண்ட வட மாநிலங்களிலும் படுதோல்வியை சந்திக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக் கிறது.
பிறக்கிறது புது இந்தியா!
ஒட்டு மொத்தமாக கடந்த பத்தாண்டு கால மாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு மாற்றாக இந்தியா கூட்டணி புதிய ஆட்சியை உரு வாக்கும். இந்த மாற்றம் ஜூன் மாதம் 4 ஆம் தேதிக்கு பிறகு ஏற்படும். அன்றைக்கு ‘புதிய இந்தியா’ பரிணமிக்கும். அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
சிஏஏவை ரத்து செய்வோம்!
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு பதிலளிக்கையில்,“இந்தியா கூட்டணி யில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தனித்தனி யாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும், ஆட்சி அமைத்த பிறகு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டிப்பாக ரத்து செய்வோம். தேர்தல் முடிவுக்கு பிறகு, இந்தியா கூட்டணி ஒன்று கூடி குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவோம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அகில இந்திய மற்றும் மாநில அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இதை வலியுறுத்துவோம்” என்றார்.
பச்சையான அரசியல் வியாபாரம்!
மேலும், “கச்சத்தீவை மீட்பதா? வேண்டா மா? என்பது ஒரு சர்ச்சையாக மாற்றப்பட்டுள் ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மோடி க்கு உண்மையிலேயே அக்கறை இருக்கு மானால், நாட்டின் பிரதமராக பத்து வருடம் இருந்தார்; நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும்; எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால், எங்கேயும் பேசவில்லை. மேலும், நமது வெளியுறவுத்துறை அமைச்சரும் செயலாளரும் இலங்கைக்கு பல முறை சென்று வந்துள்ளனர். அங்கும் பேச வில்லை.
மேலும், உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒரு வழக்கு ஜெயலலிதா தொடுத்த வழக்கு. இந்த வழக்கில் ஒன்றிய பாஜக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து முடிவுக்கு கொண்டு வந்தி ருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
அவர்களுக்கு உண்மையிலேயே கச்சத்தீவு விவகாரத்தில் அக்கறை கிடையாது. தற்போது மக்களவைத் தேர்தலுக்காக விவகாரத்தில் ஆதாயம் தேட பாஜக பயன்படுத்துகிறது.
இரு நாடுகளும் பேசி ஒரு முடிவுக்கு வந்தி ருக்கும் சூழ்நிலையில், மீண்டும் அந்த பிரச்ச னையை கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி அரசியலாகும். இது மிக மிக மோசமானது மட்டு மல்ல; பச்சையான அரசியல் வியாபாரமாகும்” என்றார்.
பாஜகவின் கொடூர அடக்குமுறைகள்!
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் மையமான அம்சங் களில் மிக முக்கியமானது கடந்த பத்தாண்டு கால மாக ஆட்சியில் இருந்த ஒன்றிய பாஜக அரசு, மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறை யாண்மை, கூட்டாட்சி, சமூக நீதி என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தையும் தகர்த்து வருகிறது. எனவே, இந்த தேர்தலில் அரசியல் சட்டத்தை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்; இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பட போராடும்.
அடுத்ததாக, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தை பயன்படுத்தி எதிர்க் கட்சியினரை கைது செய்கிறது; பாஜகவை விமர்சனம் செய்பவர் களை கைது செய்கிறது. இதுபோன்ற அனைத்து அரசியலமைப்பு விரோத சட்டங்களை ரத்து செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது” என்றார்.
பேட்டியின் போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயி னார், பா. ஜான்சிராணி, வெ. ராஜசேகரன், இ. முத்துக்குமார், மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன், ஜி.செல்வா, சி. சங்கர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.