tamilnadu

img

தமிழ்நாட்டில் மற்றொரு சுங்கச்சாவடி

ஒட்டன்சத்திரம், செப்.12- விதிகளை மீறி சுங்கக்கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மற்றொரு சுங்கச்சாவடி வசூல்  வேட்டைக்குத் தயாராகி வருகிறது. சுங்கக் கட்டணம் மிகப் பெரிய வருமானம் தரும் தொழிலாகிவிட்டது. மக்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக சில குறிப்பிட்ட  ஆண்டுகளுக்கு பின்னர் சுங்கக் கட்ட ணத்தைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க எந்த வாய்ப்பும் இல்லை.  பல இடங்களில் சுங்கக் கட்டணம் வசூ லிக்கும் தனியார் நிறுவனங்கள் அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதில்  எவருக்கெல்லாம் பங்கு  செல்கிறது என்பதை எவரும் ஊகிக்க லாம். அப்படிச் சட்டவிரோத மாக வசூல் செய்யப்பட்ட சுங்கக் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை ஆணையம் சில உதாரணங்களை முன்வைத்தது.   இந்த நிலையில், மோடி அரசு மற்றொரு சுங்கச்சாவடிகள் மூலம் அடுத்த கட்ட வசூல் வேட்டைக்குத் தயாராகிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் முதல் பொள்ளாச்சி வரை 131.95 கி.மீ., தூரத் திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.3,648 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி “மும்முர மாக” நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம்-முதல் பழநி வரை 18 கி.மீ. தொலைவுக்கு ரூ.  172.15 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு அதற்காக கட்டண வசூல்  மையம் சத்திரப்பட்டி அருகே அமைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 36.50 கி.மீ., தூரத்திற்கு தற்போது சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே, பொள்ளாச்சி - பழநி, திண்டுக்கல் கமலாபுரம் - ஒட்டன்சத்திரம் வரையும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கமலாபுரம்-ஒட்டன்சத்திரம் 36.50 கி.மீ., ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் 45.38  கி.மீ., மடத்துக்குளம்-பொள்ளாச்சி 50.07  கி.மீ., என  மூன்று பிரிவுகளாக மீதமுள்ள  பணிகள் தற்போது மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்தச் சாலை முழுமையடைந்தால் மதுரை - கோயம்புத்தூர் பயணம் நேரம் குறை யுமென்றாலும் வாகன ஓட்டிகள் ஒன்றிய மோடி அரசின் ‘கட்டணக் கொள்ளையி லிருந்து’ மட்டும் தப்ப முடியாது.