விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் பதவியேற்றுக் கொண்டார்.
குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக-வில் இணைந்தார். இதை அடுத்து, மக்களவைத் தேர்தலின் போதே விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.