tamilnadu

‘தகைசால் தமிழர்’  புதிய விருது... முதலமைச்சர் அறிவிப்பு....

சென்னை:
தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டிற் கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உரு
வாக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழக முதல்வர் தலைமையில் தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப் படும் “தகைசால் தமிழர்” விருது பெறும் விருதாளருக்குப் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

;