tamilnadu

img

தகைசால் தமிழர் விருது தொகையை முதல்வரின் கோவிட் நிதிக்கு வழங்குவதாக என். சங்கரய்யா அறிவிப்பு

தகைசால் தமிழர் விருது தொகையை முதல்வரின் கோவிட் நிதிக்கு வழங்குவதாக
என்.சங்கரய்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை
செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை
இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு.
மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள
இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின்
கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன்
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின்
நலனுக்கும், இந்தியநாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன்
காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற
பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய
கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை
இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

;