tamilnadu

img

தா. பா. மறைவு : தலைவர்கள் அஞ்சலி...

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,  தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்ற போராளியுமான தோழர் தா.பாண்டியன்  மறைவிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை தியாகராயர்நகர் பாலன் இல்லத்தில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.  சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று  உயிரிழந்த அவரது உடலுக்கு சிபிஐ மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன் அஞ்சலி செய்தார்.  அண்ணாநகரில் உள்ள தா.பா இல்லத்தில் உறவினர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிஅளவில் அவரது உடல் பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், மாநிலசெயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் உதயக்குமார் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

கட்சியின் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், தென்சென்னை மாவட்டசெயலாளர் ஏ.பாக்கியம், மத்திய சென்னை மாவட்டசெயலாளர் ஜி.செல்வா,  எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயராமன். ஆர்.முரளி, சர்வேசன், முருகேசன், மூத்தஉறுப்பினர் வீரராகவன், மூர்த்தி, தாமஸ்,  பாக்கியம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ, மல்லைசத்தியா,ஜீவன், விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் எம்பி, வன்னியரசு, திமுக சார்பில் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி,அமுமுக தலைவர்  டி.டி.வி.தினகரன், நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான்,  கவிஞர் வைரமுத்து,  இலகணேசன் (பாஜக) , மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,  போக்குவரத்து தொழிற்சங்கம் (சிஐடியு ) தலைவர்கள்  ஆறுமுகநயினார், எம்.சந்திரன், தயானந்தன், கோபிக்குமார் மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி  உட்பட ஏராளமான தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர். 

;