tamilnadu

img

வேலூரில் ஏரிக்கரைக்கு அருகே உள்ள வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பதற்றம்

வேலூரில் ஏரிக்கரைக்கு அருகே உள்ள   வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பதற்றம்

வேலூர், ஜூன் 06 - வேலூர் மாவட்டம் வேலூர் கொண வட்டம் அடுத்த தேவி நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகே உள்ள சதுப்பேரி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஏரிக்கரைக்கு அருகில் தேவி நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசிப்பவர்களை காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால்  கடந்த திங்களன்று (ஜூன்2) வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் மூன்று தலைமுறையாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களது  வீடுகளை இடிக்கக் கூடாது என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் புதனன்று (ஜூன் 04) தேவி நகர் பகுதிக்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் வருகிற 19-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரி வித்துவிட்டு சென்றனர். இதனால் மனமுடைந்த தேவி நகரை சேர்ந்த மணி (வயது 72) தனது வீட்டின் கழி வறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடுகளை காலி செய்யச் சொன்னதால் மணி தற்கொலை செய்து கொண்டார். எனவே உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத் தகவலறிந்து வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் வடிவேலு, வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மக்களின் எதிப்பை மீறி வீடுகளை இடிக்க மாட்டோம் என அதிகாரிகள் உத்திரவாதம் அளித்த னர். இதனையடுத்து உடலை பெற்று சென்றனர். மக்கள் போராட்டம் நடத்துவதை அறிந்து சிபிஎம் வேலூர் வடக்கு தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன், தாலுகா குழு உறுப்பினர்கள் என்.கன்னியப்பன், மா.ஞானவேல் அம்மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். உங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணை யாக இருக்கும் என கூறினர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.டி.சங்கரி விடுத்துள்ள அறிக்கையில், தேவி நகரில் 75 ஆண்டு களுக்கு  மேலாக வேலூரைச் சுற்றி கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் அம்மக்க ளின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.