tamilnadu

img

ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர், ஏப்.25-வேலூர் மாவட்டம் காட்பாடி சில்க் மில் பகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் (25 ஆம் தேதி) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-“அரசு கல்வியியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க சேர்ந்தோம், கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு தனித் தனியே விடுதிகள் இருந்தது, அதை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள் ளதாக கூறி எங்களை வெளியில் அறை எடுத்து தங்க சொன்னார்கள். எனவே, வெளியில் அறை எடுத்து படித்து வருகிறோம். இது எங்களுக்கு சிரமமாக உள்ளது. மேலும் வாடகைக்கு அறை கிடைப்பது இல்லை. மாணவிகள் நிலமை மிகவும் மோசம் வெளி யில் தங்கி வரும் போது, கேலி கிண்டலுக்கு ஆளாகிறார்கள். இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அடையாள போராட்டமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக வெளியில் வந்து போராட்டம் நடத்துவோம்”.இவ்வாறு தெரிவித்தனர்.

;