சென்னை, மார்ச் 18- கடந்த 2019 மக் களவைத் தேர்த லில், திமுக வேட்பா ளர் கனிமொழியை எதிர்த்து, தூத்துக் குடியில் பாஜக சார் பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் படுதோல்வி அடைந்தார்.
அவரை ஆறுதல்படுத்த தெலுங் கானா மாநில ஆளுநர் பதவி கொடுத்தது பாஜக. கூடுதலாக புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியும் வழங்கப்பட் டது.
பொதுவாக ஆளுநராக இருப்பவர்கள் அரசியலில் இருந்து விலகி இருப்பார் கள். ஆனால் தமிழிசையோ தமிழ்நாடு அரசியலில் அடிக்கடி மூக்கை நுழைத் தார். தெலுங்கானா மாநிலம் மட்டுமில்லா மல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக சார்பில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவராக இருந்தார். இதற் காக பலமுறை அரசியல் கட்சித் தலை வர்களின் விமர்சனத்தை சரமாரியாக வாங்கி கட்டிக் கொண்டார்.
இந்நிலையில்தான் திங்கட்கிழமை (மார்ச் 18) தமிழிசை ஆளுநர் பதவியிலி ருந்து விலகியுள்ளார். தனது பதவி வில கல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் சென்னை அல்லது புதுச்சேரி தொகுதியில் போட்டி யிடுவதற்காகவே அவர் ஆளுநர் பதவி யை ராஜினாமா செய்திருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.
அந்தமான் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவு களின் துணை நிலை ஆளுநர் தேவேந் திர குமார் ஜோஷிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
கோவா ஆளுநராகும் பொன். ராதாகிருஷ்ணன்
அதேபோல முன்னாள் ஒன்றிய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ண னுக்கு கோவா மாநில ஆளுநர் பதவி அளிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது.