சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
சென்னை, மே 15- மலேசியாவில் நடை பெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவில் 21-வது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, சீனா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் அக்ஷரா, நிவிதா, ஹர்ஷிதா, வினிஷா, ஃபாலிஷா, ஜியா, ஹாசினி ஆகிய ஏழு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் பதக்கங் களை வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பிய நிலையில், அவர்களுக்கு விமான நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சி யாளர்கள் மாலை அணி வித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வர வேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தி யாளர்களை சந்தித்து பேசிய பயிற்சியாளர் சீனி வாசன் கூறுகையில், ”அடுத்தபடியாக இலங்கை யில் நடைபெற உள்ள தெற்காசியா கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் எனது மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். அதற்காக தொடர்ந்து பயிற்சி அளித்து வரு கிறேன். ஏற்கெனவே தேசிய அளவில் கராத்தே சாம்பி யன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற எனது மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி அளித்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு உதவி செய்து வந்தால் கராத்தே வீரர்கள், வீராங்கனைகளின் எதிர்காலம் நல்ல நிலையில் இருக்கும்” என கூறினார்.