சென்னை,டிச.5- காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதில் தமிழ்நாடு மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
காலநிலை மாற்ற நிர்வாகக் குழு 2 ஆவது கூட்டம் வியாழக்கிழமை (டிச.5) சென்னையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “காலநிலை மாற்றத் திற்கு ஏற்ற வகையில், நம்மை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கை களை எடுத்துக் கொண்டு வருகிறோம். அரசின் அனைத்து பணிகளும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கக் குறிக்கோளோடு இணைந்து அமை வதை உறுதி செய்வது இந்த குழுவின் கடமை. எனது தலைமையிலான இந்த குழு தான் இந்தியாவிலேயே, காலநிலை மாற்றத்திற்கான முதல் குழு. அந்த வகையில், தமிழ்நாடு இந்தி யாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள் வதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. நீண்ட கடற்கரையை பாதுகாக்க தமிழ்நாடு நெய்தல் மீட்பு இயக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடியில் 5,000 சிறிய நீர் பாசனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மஞ்சள் பை திட்டம் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி பயன்பாடு குறைந்துள்ளது. இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.