தங்கத்திற்குப் பதிலாக மஞ்சள் கொம்பில் தாலி பொற்கொல்லரின் புது முயற்சி
ங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவையைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒரு வர் மஞ்சள் கொம்பில் தாலி வடிவமைத்து அனைவ ரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,290 ஆகவும், ஒரு சவரன் ரூ.66,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், யு.எம்.டி. ராஜா என்ற பொற்கொல்லர் பாரம்பரிய மஞ்சள் கொம்பை பயன்படுத்தி புதுமையான தாலியை உருவாக்கி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாக லாம். இதனை கருத்தில் கொண்டு, மஞ்சள் கொம்பை வைத்து தாலியை வடிவமைத்துள்ளேன்” என்றார்.
திருச்செங்கோடு பகுதியில் உள்ள அம்மன் குளம் நடைபாதையில் சுகாதாரமின்றி இருந்ததையடுத்து, செவ்வாயன்று நகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அப்போது தூய்மைப்பணி யாளர்களுடன் இணைந்து, நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை வளர்ப்பு தந்தை கைது
நாமக்கல், ஏப். 9 – பள்ளிபாளையத்தில், ஒரு வயது பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நடத்தியதாக ஒடிசாவைச் சேர்ந்த வளர்ப்பு தந்தை சம்மர்தாஸ் (33) கைது செய்யப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சம்மர்தாஸ், தனது மனை வியுடன் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ ருடைய மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். ஒரு வயது பெண் குழந்தை உள்பட மூன்று குழந்தைகளு டன் அவருடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று, குடி போதையில் வீட்டுக்கு வந்த சம்மர்தாஸ், மனைவியு டன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு, ஒரு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் குழந்தையை மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்தார். அப்போது, குழந்தையின் உடலில் ரத்தக்கறைகள் மற்றும் காயங்கள் காணப்பட்டன. சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட அந்த குழந்தையின் உடலில் பாலியல் வன் கொடுமை நடந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விசாரணை மேற் கொண்ட போலீசார், சம்மர்தாசை கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோட முயன்றதாகவும், பின்னர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால், கை முறிவு ஏற்பட்டுள்ளது. (போலீசார் உடைத்தனர் என பொது மக்கள் கூறுகின்றனர்) கைது செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து காவல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கொடூர சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
கோவை, ஏப். 9- சின்ன தடாகம் அருகே சுவற்றில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந் தார். கோவை, சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்தவர் செல் வராஜ் (41). இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர், செவ்வாயன்று இரவு பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி வந்து கொண்டு இருந்த போது வரப் பாளையம் பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சுவ ரில் மோதியது. இதில் இவருக்கு பலத்த காயம் ஏற் பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப் பள்ளி மைதானத்தை பாதுகாத்திடுக இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
நாமக்கல், ஏப். 9 – நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதா னத்தில் மதுப்பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மைதானத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாண வர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.தங்கராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: “ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதா னம், தினமும் அதிகாலையில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் உடற்பயிற்சி செய்யவும், காலை மற்றும் மாலை நேரங் களில் கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டு களை விளையாடவும் பயன்படுகிறது. ஆனால் சமீப காலமாக, இரவு நேரங்களில் சிலர் மைதா னத்தில் மது அருந்தி பாட்டில்களை உடைத்து அங்கும் இங் கும் வீசிவிட்டுச் செல்வது வழக்கமாகியுள்ளது. இதனால் அடுத்த நாள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்காக வருபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அரசுப் பள்ளி மைதானத்தை பாதுகாக்க காவல் துறையின் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திட வேண்டும். அவ்விடத்தில் மது அருந்தும் நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விசாரணையில் லஞ்சம்: காவலர் கைது
கோவை, ஏப். 9 – பாஸ்போர்ட் விண்ணப்பதாரரிடம் லஞ்சம் வாங்கியதாக செட்டிபாளையம் காவல் நிலைய காவலர் ரமேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் புதனன்று கைது செய்யப்பட்டார். கோவை, செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் காவல் துறை விசாரணைக்காக செட்டி பாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு பணியாற்றும் காவலர் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.1000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத் துறை யினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில், கிருஷ்ணமூர்த்தி லஞ்சப் பணத்தை காவலர் ரமேஷிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷை கையும் களவுமாகப் பிடித்தனர். ரசாய னம் தடவிய அந்தப் பணத்தை ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், அவரை செட்டிபாளையம் காவல் நிலை யத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.