மதுரையின் அடையாளங்களில் சுங்குடி சேலைகளுக்குத் தனித்த இடமுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சுங்குடிச் சேலைகள் உலகம் முழுவதும் பிரபலமானது. பல்லா யிரம் குடும்பங்கள் சுங்குடிப் புடவை களை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கூலிப்பெண்கள், மீனவப் பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச்சுங்குடிச் சேலைகள் தயாரிக்கும் தொழில் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் அதற்கு 2005-ல் அப்போ தைய காங்கிரஸ் அரசு புவிசார் குறியீடு வழங்கி கெளரவித்துள்ளது. மதுரை, சின்னாளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உற்பத்தியாகும் சுங்குடி சேலைகளை, அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுங்குடிச் சேலை களை அணிவதில் ஆர்வம் கொண்டவர். சுங்குடி சேலைகள் நூறு சதவீதம் பருத்தி துணியால் உற்பத்தி செய்யப்படுபவை. அவை கோடைக்கு மட்டுமின்றி குளி ருக்கும் இதம் அளிக்கக் கூடியது. மதுரை யில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடிச் சேலைகள் உற்பத்தி செய்யப் படுகின்றன.
வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட், ஸ்கிரீன் பிரிண்ட், அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுவார்கள். தர மான சுங்குடிச் சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது, மொழிச் சிறு பான்மையினரான சௌராஷ்டிரா சமூக மக்கள் பாரம்பர்யமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரையில் வில்லாபுரம், அவனியா புரம், வண்டியூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுங்குடிச் சேலைகள் உற்பத்தி மூலமாக பல்லாயி ரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். நூல் விலையேற்றம் மற்றும் ஏனைய மூலப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் சற்று பாதிப்படைந்தது அத்தோடு கொரோனா பேரிடர் காலத்தில் இத்தொழில் மேலும் சற்று முடங்கிப் போனது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் சுங்குடிச் சேலை உள்ளிட்ட கைத்தறி ஜவுளித் தொழிலுக்கு தற்போதைய ஒன்றிய அரசு 5 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 12 சதவீத ஜிஎஸ்டி போடு வதாக அறிவிப்பு செய்தது.
எளிய மக்க ளை பாதிக்கும் இத்தகைய அறிவிப்பை கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லி யில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து 12 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை உடனடியாக கைவிட வலியுறுத்தினார். மேலும் பாரம்பரிய சுங்குடிச் சேலை உற்பத்தியை பாதுகாக்க தொடர்ந்து சுங்குடிச் சேலைக்கு முற்றிலும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டம் நடத்திய சுங்குடிச் சேலை உற்பத்தியாளர்கள் மதுரை எம்.பி., சு. வெங்கடேசனின் உடனடி நடவடிக்கை யை பாராட்டி அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக மதுரை கைநெசவு தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது; கைநெசவுத் தொழிலில் ஈடுபட புதிய தாக யாரும் வருவதில்லை. இருக்கின்ற தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாக்க இத்தொழில்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். மாதந்தோ றும் குறைந்தபட்ச நிவாரண தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும். ஏற்கெனவே சாயப்பவுடர் விலை உயர்வு உள்ளிட்ட கச்சாப் பொருட்களின் விலை ஏற்றத் தால் கைநெசவுத் தொழிலும் சமீப கால மாக நலிவடைந்து வருகிறது. அப்படி யிருக்கையில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வானது இத்தொழிலை கடுமை யாகப் பாதிக்கும். எனவே வரி உயர்வை நிறுத்தி நெசவாளர்களின் நெஞ்சங்களில் நிமிர்ந்து நிற்கிறார் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்.
ஜென்னி