tamilnadu

img

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசை சஸ்பெண்ட் செய்க...

சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வரும் ராஜேஷ்தாஸ், பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் குறித்த விஷயத்தில் அவர் பலவீனமானவர் என்று ஊடகங்களில் செய்தி வருகிறது. உடனடியாக ஒரு விசாரணைக்குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து முழுமையான விசாரணை நடத்தி, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் ராணி, மாவட்டச் செயலாளர்கள் வி.தனலட்சுமி (மத்தியசென்னை), பாக்கியம் (வடசென்னை), சித்ரகலா (தென்சென்னை) ஆகியோர் பிப்ரவரி 27 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் அளித்த புகார்.

;