tamilnadu

4 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு: சிபிஐ

சென்னை, ஏப்.13-தமிழகத்தில் காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதி இடைத்தேர்தலை 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. இந்த நான்கு தொகுதிக ளுக்கும் உடனடியாக தேர் தலை அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத் தப்பட்டது. இந்நிலையில் இத்தொகுதிகளுக்கான தேர் தல், மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. இது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும்.இந்த நான்கு தொகுதிகள் உட்பட, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனதுஆதரவை தெரிவிக்கிறது என்று அறிக்கை ஒன்றில் ஆர்.முத்தரசன் கூறியுள்ளார்.

;