tamilnadu

இடிந்த மதுரை மேம்பாலம் குறித்து நாளை ஆய்வறிக்கை தாக்கல்

மதுரை,செப்.15- மதுரை நாராயணம்புரம் பகுதியில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்து குறித்த உண்மை காரணங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை நிபுணர் குழு வெள்ளி யன்று தாக்கல் செய்கிறது. மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் அருகேயுள்ள இணை ப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த சமீபத்தில் இடிந்து விழுந்தது. இதில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் கட்டுமான நிறுவன திட்ட பொருளாளர், கட்டுமானப்பணியின் பொரு ளாளர், ஹைட்ராலிக் இயந்திரத்தின் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசார ணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த விப த்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழிற்நுட்ப கழகத்தின் பேராசிரி யர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் நேரடியாக ஆய்வுகளை செய்து அறிக்கை யை தாக்கல் செய்வார் என்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந் தார். அதன்படி நிபுணர் குழுவின் தலைமை யில் ஆய்வு நடைபெற்றது. இதுதொடர்பான கட்டுமான பொறியாளர், ஹைட்ராலிக் இயந்திர ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

;