நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரி வியாழனன்று (ஜூலை 4) நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத்தலைவர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்த்குமார், கிளைச் செயலாளர் சதீஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இப்ராஹிம், மாவட்டத் தலைவர் மணி ஆகியோர் பேசினர்.