மயிலாடுதுறை/திருச்சிராப்பள்ளி, மார்ச் 13 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 மூலம், இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் மீது நேரடித் தாக்குதலை நடத்துகிறது பாஜக. எனவே இச்சட்டத்தை கண்டித்து சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினர் விஷ்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கையை விளக்கி ஒன்றியச் செயலாளர் ஆர்.பிரவீன், மாவட்டத் தலைவர் ஏ.அமுல்காஸ்ட்ரோ மற்றும் கிளை நிர்வாகிகள் விளக்கி பேசினர். போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. திருச்சி மாநகர் சார்பில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மாவட்டக் குழு உறுப்பினர் ரஞ்சித் தலைமையிலும், நவலூர் கொட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன் தலைமையிலும், திருவெறும்பூர் கடைவீதியில் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் ஆமோஸ் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.