ஓசூர் மாநகராட்சியில் சொத்து,வணிக நிறுவனங்கள்,குடிநீர்,குப்பைகளுக்கு கடுமையாக வரி உயர்த்தப்பட்ட நிலையில், சிலருக்கு முன் தேதியிட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள்,கட்டுமான நிறுவனங்களின்,வணிகர்கள்,தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு,மருத்துவமனைகள் கூட்டமைப்பு,இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு,ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளிட்ட 32 சங்கங்கள் இணைந்து,ஓசூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில் மின்சார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நிர்வாகிகள் தாமஸ்,சீனிவாசலு,பிரேமா,சரவணன், முத்து,பாஸ்கர்,அஸ்வத் நாராயணன்.நடராஜன், ஹோஷ்டியா மூர்த்தி கலந்து கொண்டனர்.