tamilnadu

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

வேலூர், ஏப்.23-ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிப்காட்டை அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (62). ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அமைவதற்காக கடந்த 1981-ஆம் ஆண்டு பலரிடம் இருந்த நிலங்களை வருவாய்த்துறை கையகப்படுத்தியது. அப்போது ஆனந்தனின் ஒரு ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஆனந்தனுக்கு சேர வேண்டிய ஒரு பகுதி தொகையினை வருவாய்த்துறையினர் தரவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து ஆனந்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆனந்தனுக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 401-ஐ நிலத்திற்கு இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என அரக்கோணம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வருவாய்த் துறையினர் இழப்பீடு தொகையை வழங்கவில்லை.இந்த நிலையில் அரக்கோணம் சார்பு நீதிமன்ற உத்தரவுப் படி நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரரின் வக்கீல் வெங்கடேசன், மனுதாரர் ஆனந்தன் ஆகியோர் ராணிப்பேட்டை கோட்டாட் சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்திருந்தனர்.அப்போது ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம்பகவத், இதுதொடர் பாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

;