கடலூர், டிச.20- ஜனவரி-8 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட கடலூர் மாவட்ட அளவிலான ஆயத்த மாநாடு டிச.20 வெள்ளியன்று நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. தொமுச மாவட்டச் செயலாளர் மு.சு.பொன்முடி தலைமையேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் .டி.பழனிவேல், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பி.துரை, எச்எம்எஸ் தலைவர் என்.மணி, மாவட்டக்குழு பி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிஐடியு மாநில துணைத் தலைவருமான எஸ்.கே.மகேந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம் ராதாகிருஷ்ணன், ஏஐயுடியுசி மாநிலக்குழு உறுப்பினர் பி.மோகன் , ஏஐசிசிடியு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜி.தனபால், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் வி.குளோப், நெய்வேலி சிஐடியு பொதுச் செயலாளர் டி.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.