பென்னாகரம், ஜூன் 26- குடிநீர் கேட்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலு வலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்று கையிட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவ நிலை ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்க ளாக இவர்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. ஏற் கனவே வழங்கப்பட்டு வந்த குடிநீரும் போதுமான அள வாக இல்லை எனக் குற்றஞ்சாட்டி அப்பழுதி பொதுமக்கள் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்படுவதில்லை. ஒருவருக்கு மூன்று அல்லது நான்கு கூடங்கள் மட்டுமே குடிநீர் கிடைக்கின்றது. இது வைத்து நாங்கள் குடிப்பதா, சமைப்பதால் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதா என்று தெரியவில்லை. மேலும் எங்கள் பகுதியில் ஏற் கனவே போடப்பட்டிருந்த இரண்டு ஆழ்துளை கிணறு களில் மோட்டர்கள் இயங்குவிதில்லை. இதனால் குடி நீருக்கு பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். அதி காரிகள் உடனடியாக எங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.