tamilnadu

img

சாலைகள் மேம்படுத்த நடவடிக்கை

தருமபுரி, ஏப்.5-சாலைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சனியன்று அவர் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். அப்போது அவர் பேசுகையில், ஒகேனக்கல்குடிநீர் அனைத்து கிராமங்களுக்கு கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்தசாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேலைவழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்டப்படும். ஏரிகளை சுத்தம் செய்யப்படும். ஆகவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கிராமமக்களை கேட்டுக்கொண்டார்.இந்த பிரச்சாரத்தின் போது, திமுக ஒன்றிய செயலாளர்கள் சண்முகநதி, தேசிங்குராஜன், நகர செயலாளர் முல்லைசெழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.இப்பிரச்சாரம் முத்தானுரில் துவங்கிவேப்பம்பட்டி, மாம்பாடி, வீரப்பநாய்கன்பட்டி, பாளையம், காட்பாடி, வேடியப்பன்கோயில், அண்ணாநகர், பாரதிநகர், கூடலூர், கோபாலப்பட்டி, புதூர், தீர்த்தமலை, குரும்பட்டி, பொய்யப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.

;