tamilnadu

மின்வாரிய காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை!உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி பகுதியைச் சேர்ந்தவர் புரு ஷோத்தமன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “தமிழக மின்சார  வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி 22.08.2024 அன்று அறிவிக்கப் பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தால்- விழாக் காலங்கள் நெருங்கி வரும் நிலை யில், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே பொது மக்கள் நலன் கருதி இந்த போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந் தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.  கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று (21.08.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) தெரிவிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என விளக்கம் அளிக்கப் பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்த தொழிற்சங்கம் சார்பிலும், “இது தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறு கிறோம்” எனத் தெரிவித்தது.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒப்பந்தம் முறையிலோ, தற்காலிகமாகவோ காலி இடங்களை நிரப்ப அறி வுறுத்தி இந்த வழக்கு விசாரணை யை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.