சென்னை, அக்.29 ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி யில், சென்னை, முகப்பேரில் இயங்கி வரும் வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ப.தமீனா தஸ்பிஹா இடை நிலைப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். ‘இடைநிலை’, ‘மேல்நிலை’, ‘கல்லூரி’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்தியது. இதில் 1695 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை, புதுச்சேரி, மதுரை, நெல்லை, திரு வாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 10 மண்ட லங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடை பெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 30 போட்டி யாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். முதல் பரிசாக ரூ. 10,000,2வது பரிசாக ரூ. 7,500 மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை யும், சான்றிதழும் வழங்கப்ப ட்டன.