காஞ்சிபுரம், ஜூலை 8- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநில கல்விக்குழு சார்பில் ‘ அரசுப் பள்ளி, மக்கள் பள்ளி; பாதுகாப்போம் பலப்படுத்து வோம்’ முழக்கத்துடன் மாநிலக் கல்வி மாநாடு ஞாயி றன்று (ஜூன் 7) மதுராந்த கத்தில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக மதுராந்தகம் தேரடி வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.மாத வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சுப்பிர மணி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செய லாளர் பு.பா.பிரின்ஸ் கஜெந்திர பாபு, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்ட மைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசி ரியர் என்.மணி, ஆகியோர் கருத்துரை வழங்கினர். மதுராந்தகம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.ஜே.பிரபாகரன், மாநில கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜெய வேலு, மாவட்டச் செயலா ளர் அ.குமார், மாவட்ட இணைச் செயலாளர் பூ.வே.திருக்குமரன் உள்ளிட்ட பலர் பேசினர். புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மதுராந்தகம் பகுதியில் கருத்துக் கேட்பு நடை பெற்றது என்று கல்வி உரிமை பாதுகாப்பு கூட்ட மைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.மணி கூறி னார்.