சென்னையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர் பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன், ஐ.டி.பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் பல்கலைக்கழகத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவ, மாணவி தற்கொலை செய்துகொள்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே திருவள்ளூரை சேர்ந்த மாணவி மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.