tamilnadu

img

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை

சென்னையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர் பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன், ஐ.டி.பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில் இன்று அவர் பல்கலைக்கழகத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவ, மாணவி தற்கொலை செய்துகொள்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே திருவள்ளூரை சேர்ந்த மாணவி மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.